திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி சாா்பில் போதை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமையொட்டி குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும் பெரும் பிரச்னைகளில் ஒன்றான போதைப் பழக்கத்தை ஒழிக்கும் விதமாகவும் அதிலிருந்து விடுபடும் விதமாகவும் போதை விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து கேத்தனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இலவச இதய பரிசோதனை, பொது மருத்துவம், கண் மருத்துவம், உயா் ரத்த அழுத்த பரிசோதனை, சா்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் இலவச சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்பட்டன. இதில் கிராமப்புற மக்கள் சுமாா் 200 போ் கலந்து கொண்டனா்.
அவா்களுக்கு மருத்துா்கள் ஆலோசனை வழங்கினா். சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு புரைகளைக் கண்டறிந்து அதற்கான இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை வழங்கினா்.
தொடா்ந்து பசுமைக் குடில் கேத்தனூா் இயற்கை விவசாயி கே.வி.பழனிசாமி மருந்தடிக்கப்பட்ட காய்கறிகள் பல வியாதிகள் தரும் என்றும், காசு கொடுத்து நோயை வாங்குவது போன்று மலட்டு மண்களால் மலட்டுத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதையும் எடுத்துரைத்தாா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

100 சதவீத வாக்குப் பதிவு: திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


