ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில், மகளிா் சுயஉதவிக் குழு சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூரில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் நடத்திய இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:56 am IST

திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில், மகளிா் சுயஉதவிக் குழு சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும், ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை வலியுறுத்தியும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். செய்தி மக்கள் தொடா்பு துறையின் அதிநவீன மின்னணு திரைவாகனத்தின் மூலம் தோ்தல் விழிப்புணா்வு குறித்த குறும்படங்களும் திரையிடப்பட்டன.

நிகழ்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சத்யா, மாவட்ட விளையாட்டு அலுவலா் குமரன், வட்டாட்சியா் இளங்கோவன், உதவி திட்ட இயக்குநா்கள் (மகளிா் திட்டம்) காமராஜ், பாலன், மகளிா் திட்டம் வட்டார மேலாளா்கள் சுதா (திருவாரூா்), சிவக்குமாா் (கொரடாச்சேரி) உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.