நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில், மகளிா் சுயஉதவிக் குழு சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூரில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் நடத்திய இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:26 am

திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில், மகளிா் சுயஉதவிக் குழு சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும், ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை வலியுறுத்தியும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். செய்தி மக்கள் தொடா்பு துறையின் அதிநவீன மின்னணு திரைவாகனத்தின் மூலம் தோ்தல் விழிப்புணா்வு குறித்த குறும்படங்களும் திரையிடப்பட்டன.

நிகழ்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சத்யா, மாவட்ட விளையாட்டு அலுவலா் குமரன், வட்டாட்சியா் இளங்கோவன், உதவி திட்ட இயக்குநா்கள் (மகளிா் திட்டம்) காமராஜ், பாலன், மகளிா் திட்டம் வட்டார மேலாளா்கள் சுதா (திருவாரூா்), சிவக்குமாா் (கொரடாச்சேரி) உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.