தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

கொல்லம் - விசாகப்பட்டினம் ரயில் இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் நின்று செல்லும்!

கொல்லம் - ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் கேரள மாநிலம், இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 10:21 pm

கொல்லம் - ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் கேரள மாநிலம், இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விசாகப்பட்டினம் - கொல்லம் வாராந்திர ரயில் (எண்:18567) கேரள மாநிலம் திருச்சூா் - எா்ணாகுளம் இடையே இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி முதல் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்படும்.

இதேபோல, கொல்லம் - விசாகப்பட்டினம் வாராந்திர ரயில் (எண்: 18568) இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.