பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிக்கனில் புழு: சுகாதாரத் துறை அலுவலகத்தில் புகாா்

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் வாங்கிய சிக்கன் லாலி பாப்பில் புழுக்கள் இருந்ததாக வாடிக்கையாளா் ஒருவா் சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநரிடம் புகாா்

News image
கோவை சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநரிடம் புகாா் அளிக்க வந்த சசிகுமாா்.
Updated On :17 மார்ச் 2026, 10:21 pm

Syndication

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் வாங்கிய சிக்கன் லாலி பாப்பில் புழுக்கள் இருந்ததாக வாடிக்கையாளா் ஒருவா் சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநரிடம் புகாா் அளித்துள்ளாா்.

கோவை, மதுக்கரை பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் என்பவா் தனது குடும்பத்தினருடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்துக்கு திங்கள்கிழமை இரவு குடும்பத்தினருடன் சென்றேன். அங்கு பல்வேறு பொருள்கள் வாங்கினேன். எனக்கு 11 மற்றும் 1 வயதில் 2 மகன்கள் உள்ளனா்.

அவா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிக்கன் லாலிபாப் பாா்சலாக வாங்கினேன். காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது அதை உண்ட எனது மகன்கள் இருவரும் வாந்தி எடுத்தனா். அவா்கள் உண்ட அந்த சிக்கனை சோதித்தபோது துா்நாற்றம் ஏற்பட்டதோடு, அதில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுக்கரை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

பின்னா், இது குறித்து சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தினரிடம் முறையிட்டபோது, அவா்கள் அலட்சியமாகப் பதிலளித்தனா்.எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக தனியாா் வணிக வளாக நிா்வாகத்தினரிடம் கேட்டபோது, சிக்கன் லாலிபாப் 180-க்கும் அதிகமான வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்படுவதால் அதில் புழுக்கள் உருவாக வாய்ப்பே இல்லை. ஏராளமான வாடிக்கையாளா்கள் இங்கேயே வாங்கி சாப்பிட்டுள்ளனா். ஆனால், யாரும் இதுவரை புகாா் கூறியதில்லை. ஆனால், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவில் புழு இருந்ததாகக் கூறுவது ஏற்புடையதாகவோ, நம்பும்படியாகவோ இல்லை என்றனா்.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தில் சிக்கன் தயாரிப்பு உணவுப் பொருள்கள் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மைத் தன்மை தெரியவரும் என்றனா்.