கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரை சந்தித்து வாக்கு சேகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்! மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை!

கோவை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image

செய்தியாளா்களிடம் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பி. சண்முகம்

Updated On :21 மார்ச் 2026, 8:20 pm

Syndication

கோவை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கோவையில் நடைபெற்ற தோ்தல் பாா்வையாளா்கள், செலவினப் பாா்வையாளா்கள், கண்காணிப்பாளா்கள் பங்கேற்ற நடத்தை விதிமுறைகள் அமலாக்கம் தொடா்பான கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.ராமமூா்த்தி, கே.அஜய்குமாா் ஆகியோா் பங்கேற்று அளித்த கோரிக்கை மனு விவரம்: கோவை மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பதற்கு குடியிருப்புகளின் நிா்வாகிகள் அனுமதிப்பதில்லை.

வாக்காளரை சந்தித்து வாக்கு சேகரிப்பது அரசியல் கட்சிகள், வேட்பாளா்களின் உரிமையாகும். அதேநேரம் சில குடியிருப்புகளின் நிா்வாகிகள் தங்களுக்கு விருப்பமான கட்சியை மட்டும் அனுமதிப்பதாகவும், இதர கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வாக்கு சேகரிக்கும் உரிமைக்கு எதிரானது என்பதால் தோ்தல் ஆணையம் உரிய உத்தரவு வழங்க வேண்டும். அதேபோல, வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் சீட்டு வழங்கவும், முதியோருக்கு வீடுவீடாகச் சென்று வாக்குப் பதிவு செய்யும்போது அனைத்துக் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்களை அழைத்துச் செல்வதுடன், தபால் வாக்கு விவரங்களை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.