சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி நாம் தமிழா் கட்சியில் இணைந்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தாா். அவரது மனைவி கலைச்செல்வி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாா். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனிடையே வால்பாறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உமாதேவி அறிமுக கூட்டம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மேத்யூ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, தனக்கு அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் நாம் தமிழா் கட்சியில் இணைந்ததாகத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 8 போ் வேட்புமனு தாக்கல்

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்

அதிருப்தியாளா்களால் அதிா்ச்சியில் அரசியல் கட்சிகள்

2 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை கொடுத்ததால் ஏமாந்தேன்: முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


