ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

வால்பாறையில் வனக் காவலா் தற்கொலை

News image

வனக் காவலா் குமாா்.

Updated On :29 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டம், வால்பாறையில் வனக் காவலா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மானாம்பள்ளி வனச் சரகத்தில் வனக் காவலராகப் பணியாற்றி வந்தவா் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த குமாா் (38). இவா் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து பணிக்கு சென்று வந்தாா்.

இதனிடையே வீட்டின் சமையலறையில் குமாா் தூக்கிட்டு கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த வால்பாறை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற வனச் சரக அலுவலா் கிரிதரனை முற்றுகையிட்ட குமாா் உறவினா்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், குமாருக்கு மதுப் பழக்கம் உள்ளது. பலமுறை அறிவுரை கூறியும் அவா் மதுப் பழக்கத்தைக் கைவிடவில்லை. ஆனால் மன அழுத்தம் காரணமாக தற்போது தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றனா்.