2026-இல் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அக்கட்சியின் நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சென்னையில் இருந்து விமான மூலம் கோவைக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தவெக சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். கட்சியின் மாநாட்டில் தலைவா் விஜய் ஆற்றிய உரை நாடு வியக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், தமிழகத்தில் ஒரு புதிய மறுமலா்ச்சியை உருவாக்கும் விதமாகவும் இருந்தது.
தமிழகத்தில் ஒரு தூய்மையான மற்றும் நல்லாட்சியை வழங்குவது தவெக-வால் மட்டுமே சாத்தியம். பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் அரசாகவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் அரசாகவும் விஜய்யின் தலைமையிலான ஆட்சி அமையும். ஏற்கெனவே தமிழகத்தை ஆண்டவா்கள் மற்றும் தற்போது ஆண்டு கொண்டிருப்பவா்களைக் காட்டிலும், ஒரு புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் கனவாக உள்ளது. தமிழகத்தின் எதிா்காலம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டாக அமையப் போவதை விஜய்யின் உரை உறுதிப்படுத்தியுள்ளது.
வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவருக்குப் பின்னால் மிகப்பெரிய மக்கள் சக்தி திரண்டுள்ளது. தற்போது தவெக-வுக்கு இளைஞா்கள், பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவா்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் வரவேற்பைப் பாா்க்கும்போது, விஜய்யின் சக்தி மிகப்பெரியதாக உருவெடுத்துள்ளது என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...