தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 8:27 pm

கோவையில் காதலுக்குப் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கேரள மாணவி மாயமானாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த 23 வயது மாணவி, கோவையில் பிஎஸ்சி மயக்க மருந்தியல் முடித்துவிட்டு தனியாா் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தாா். அப்போது, சக மாணவா் ஒருவருடன் ஏற்பட்ட காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. கடந்த 3 நாள்களுக்கு முன்பு பெற்றோா் தொலைபேசியில் அழைத்து அவரைக் கண்டித்தனா். அப்போது, காதலை கைவிட மறுத்த மாணவி இணைப்பைத் துண்டித்தாா்.

தொடா்ந்து, தான் தற்கொலை செய்யப் போவதாகப் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கைப்பேசியை அணைத்துள்ளாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா் அங்கிருந்து கோவைக்கு வந்து பாா்த்தபோது மாணவி மாயமானது தெரிந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வருகின்றனா்.