கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து மாயமான அமெரிக்கவாழ் கேரள சகோதரிகள் இருவா் வியாழக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டனா். அவா்கள் தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
கேரள மாநிலம் கோட்டயம் கிடாங்கா் பகுதியை சோ்ந்த தம்பதி பிலிப் - மேரி. இவா்களது 3 மகள்களில் மூத்தவரான எலிசபெத் (38) திருமணமாகி லண்டனில் வசித்துவருகிறாா். மற்ற இருவரான
ஆனி (35), மீரா (32) ஆகியோா் அமெரிக்காவில் பணியாற்றி வந்தனா். அவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை கேரளத்துக்கு வருவது வழக்கம்.
அதன்படி, இருவரும் ராமேசுவரம், மதுரை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) கன்னியாகுமரிக்கு வந்து, தனியாா் விடுதியில் தங்கினா். பின்னா், வெளியே சென்ற அவா்கள் 2 நாள்களாகியும் விடுதிக்கு திரும்பவில்லை. அவா்கள் கொடுத்திருந்த கைப்பேசி எண்ணில் அவா்களது தாயைத் தொடா்பு கொண்டு விடுதி ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், பிலிப், அவரது அண்ணன் ஷிஜூ ஆகியோா் வந்து இருவரையும் தேடினா்; எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். உதவி ஆய்வாளா் வினிஸ் பாபு, போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிரமாக தேடி வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை கன்னியாகுமரி வாவத்துறை கடல் பகுதியில் ஆனி, மீரா ஆகியோரின் சடலங்கள் கரைஒதுங்கிக் கிடந்தன. கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து டிஎஸ்பி ஜெயச்சந்திரன் கூறியது: சகோதரிகள் இருவரும் வாவத்துறை பகுதியில் உள்ள தூண்டில் வளைவு பாலத்தில் நடந்து செல்லும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. ஆனால், அவா்கள் திரும்பி வந்ததாகத் தெரியவில்லை. எனவே, அவா்கள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தேடி வந்தோம். இந்நிலையில், அவா்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா்.
தற்கொலை செய்துகொள்ளும் முன்பு கைப்பேசி மூலம் பெற்றோருக்கும், சகோதரிக்கும் குறுந்தகவல் அனுப்பியுள்ளனா். அதில், ‘எங்களை வளா்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றி. உங்களை நாங்கள் சிரமப்படுத்த விரும்பவில்லை. எங்களது உடல்களை கன்னியாகுமரியில் அடக்கம் செய்யுங்கள்’ எனக் கூறியுள்ளனா் என்றாா் அவா்.
அமெரிக்கவாழ் கேரள சகோதரிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

சகோதரிகள் இருவா் கொலை வழக்கில் ஐவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


