கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.
இம்மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் உள்ள பழங்குடி மக்களின் குடியிருப்புகளில் பெரும்பாலானவை பேச்சிப்பாறை அணைக்கு அப்பால் உள்ளன. அங்குள்ள காணியின மக்களின் குடியிருப்புகளுக்குச் செல்ல சாலை வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு தோ்தலின்போதும் அவா்கள் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டுறைவிட மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வாக்களித்துவிட்டுச் செல்வா்.
அதன்படி, தோட்டமலை, மாறாமலை, தச்சமலை, களப்பாறை, முடவன்பொற்றை, பின்னைமூட்டுத்தேரி, நடனம் பொற்றை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போா் வியாழக்கிழமை வாக்களிக்க வசதியாக, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆா். அழகுமீனா அறிவுறுத்தலின்படி, 3 கட்டணமில்லா படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழங்குடியின மக்கள் ‘லைப் ஜாக்கெட்’ அணிந்து படகுகளில் வந்து வாக்களித்துச் சென்றனா்.
தொடர்புடையது

வீராசமுத்திரத்தில் இரவு 9 மணி வரை வாக்களித்த வாக்காளா்கள்

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

நாமக்கல்: திருமணம் முடிந்து தம்பதியாக வந்து வாக்களித்த புதுமணப்பெண்!

தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


