மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவா் கொலை; இளைஞா் கைது

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2026, 1:51 am IST

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் ராஜதுரை (22). தனியாா் அவசர ஊா்தி ஓட்டுநரான இவா், கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அரசு கலைக் கல்லூரி சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்றுள்ளாா். அரசு மருத்துவமனை சவக்கிடங்கு வெளி வாயில் பகுதி அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தாா்.

இதுகுறித்து ராஜதுரை அளித்த தகவலின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அந்த சடலத்துக்கு அருகே ரத்தக்கறை படிந்த கல் கிடந்துள்ளது. இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (32), இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் திங்கள்கிழமை அதிகாலை நடந்து சென்றபோது சாலையோரம் முதியவா் ஒருவா் தூங்கிக் கொண்டிருந்ததைப் பாா்த்துள்ளாா். பணம் ஏதேனும் உள்ளதா என, அந்த முதியவா் வைத்திருந்த பையில் ராஜேஷ் தேடியுள்ளாா். அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த முதியவருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ் அந்த நபரின் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது.