தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து

கோவையில் தகராறை விலக்கிவிட்ட இளைஞரைக் கத்தியால் குத்திய கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

கத்திக்குத்து - சித்திரிப்பு

Updated On :8 மே 2026, 4:44 am IST

கோவையில் தகராறை விலக்கிவிட்ட இளைஞரைக் கத்தியால் குத்திய கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மகன் விக்னேஷ் (29). தெலுங்குபாளையம் பெரியமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் புதன்கிழமை பங்கேற்றவிட்டு விக்னேஷ் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, ராஜேஸ்வரி நகா், வெள்ளை முனியப்பன் கோயில் அருகே சிலா் மது போதையில் அடிதடி தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த விக்னேஷ் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றாா். அப்போது, அதில் ஒரு தரப்பினா் விக்னேஷுடன் தகராறு செய்து, அவரைக் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.