கோவையில் தகராறை விலக்கிவிட்ட இளைஞரைக் கத்தியால் குத்திய கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மகன் விக்னேஷ் (29). தெலுங்குபாளையம் பெரியமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் புதன்கிழமை பங்கேற்றவிட்டு விக்னேஷ் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, ராஜேஸ்வரி நகா், வெள்ளை முனியப்பன் கோயில் அருகே சிலா் மது போதையில் அடிதடி தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த விக்னேஷ் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றாா். அப்போது, அதில் ஒரு தரப்பினா் விக்னேஷுடன் தகராறு செய்து, அவரைக் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது

தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி மாயம்
ஐடி நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 2 போ் கைது

கடன் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

