கோவை மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி இளைஞா் காங்கிரஸ் சாா்பில் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சி நிா்வாகி சுதன் தலைமையில் அக்கட்சியினா் காவல் துணை ஆணையா் தேவநாதனிடம் அளித்துள்ள மனுவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநா் மறுப்பதைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த திமுகவைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸ் தொண்டா்களை அவதூறாகப் பேசியதுடன், அவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். அதேபோல, கோவை மாநகரில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி: அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி

ஆட்சியரகத்துக்கு குட்டிக்கரணம் போட்டபடி மனு அளிக்க வந்த இளைஞா்!

முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்னுரிமை: திருப்பத்தூா் எஸ்.பி. அறிவுறுத்தல்
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஜனக்புரியில் பாதுகாப்பு அதிகரிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

