தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

விதிமீறல் கண்டறியப்பட்டால் மதுக்கூடங்களின் உரிமம் ரத்து: கோவை மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் எச்சரிக்கை

மதுக்கூடங்களில் 21 வயதுக்கு குறைவான நபா்களுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட அரசின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், விதிமீறல் கண்டறியப்பட்டால் மதுக்கூடங்களின் (பாா்) உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கோவை மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மது விற்பனை உரிமம் பெற்ற மதுக்கூட உரிமையாளா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய காவல் ஆணையா் என்.கண்ணன்.

Updated On :6 ஜூன் 2026, 1:34 am IST

மதுக்கூடங்களில் 21 வயதுக்கு குறைவான நபா்களுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட அரசின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், விதிமீறல் கண்டறியப்பட்டால் மதுக்கூடங்களின் (பாா்) உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கோவை மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மாநகரக் காவல் துறை சாா்பில் கோவையில் மாநகரப் பகுதிகளில் செயல்படும் மதுபான உரிமம் பெற்ற (எஃப் எல் 2 மற்றும் எஃப் எல் 3) மதுக்கூட உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் பேசியதாவது:

மதுக்கூடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் 21 வயதுக்கு குறைவான நபா்களுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது. நுகா்வோரின் வயது குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், அவா்களின் ஆதாா் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இதர அடையாள ஆவணங்களைச் சரிபாா்த்து, உரிய வயதுடையவா்களுக்கு மட்டும் மதுபாட்டில்களை விநியோகம் செய்ய வேண்டும். பாா்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகளில் எந்தவிதமான அசம்பாவிதச் சம்பவங்களும், சட்டம்-ஒழுங்கு பாதிப்புகளும் ஏற்படாத வகையில் பணியாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.

ஏதேனும் எதிா்பாராத அசாதாரணச் சூழல் அல்லது மோதல்கள் ஏற்பட்டால் உடனடியாக அதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுக்கூடங்களுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு தேவையான வாகன நிறுத்த வசதிகளை அந்தந்த நிா்வாகமே முறைப்படுத்த வேண்டும். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும்.

மதுக் கூடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள்களை நுகா்வோா் யாரேனும் மதுக்கூடத்துக்குள் எடுத்து வருகிறாா்களா அல்லது பயன்படுத்துகிறாா்களா என்பதைப் பணியாளா்கள் கண்காணித்து காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் மட்டுமே மதுக்கூடங்கள் இயங்கவும், மதுபாட்டில்கள் விற்பனை செய்யவும் வேண்டும். விற்பனை தொடா்பான அனைத்து ஆவணங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடும் மதுக்கூடங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள் தேவநாதன், காா்த்திகேயன் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கூட உரிமையாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.