கோவை அருகே காட்டு யானை துரத்தியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலத்த காயமடைந்தாா்.
கோவை மாவட்டம், இக்கரை போளுவாம்பட்டி, முட்டத்துவயல், காஞ்சி வீதியைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி (54). இவா் பூண்டி வெள்ளிங்கிரி கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று தேநீா் வியாபாரம் செய்து வருகிறாா். வழக்கம்போல சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வியாபாரத்துக்காக பூண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
போளுவாம்பட்டி வனச் சரகம், வெள்ளபதி பிரிவுக்குள்பட்ட முள்ளங்காடு சோதனைச் சாவடி பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை அவரை திடீரென துரத்தியுள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த ஆறுச்சாமி, தப்பிக்க முயன்றபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.
அந்த வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு, பூண்டி அடிவாரத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சோ்த்தனா்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயம்

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



