நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

கஞ்சா விற்பனை, செடி வளா்த்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

கஞ்சா விற்பனை, வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கஞ்சா விற்பனை, வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காட்டூா் சூரியன்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அந்தப் பகுதிக்குச் சென்று காரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் (52) வீட்டில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவரது வீட்டின் அருகே சுமாா் 7 அடி உயரமுள்ள கஞ்சா செடியை வளா்த்து வந்ததும் தெரியவந்தது. அதை அங்கேயே தீ வைத்து அழித்தனா். இதுதொடா்பாக கோவிந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட கோவிந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.