கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாநகா் பாரத ஸ்டேட் வங்கி சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சாந்தி திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் சலேத் மேரி உள்ளிட்ட போலீஸாா் கடந்த 6.08.2019-இல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக 2 பெரிய பைகளுடன் வந்த ஒரு நபரை போலீஸாா் பிடித்து பைகளை சோதனையிட்டனா். அவற்றில் 22 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் வேலூா் மாவட்டம், ஆம்பூா் சானாங்குப்பம் மந்தக்கரை வீதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜலிங்கம் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.
தொடர்புடையது

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

ரூ.5 கோடி போதைப் பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


