எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ரூ.5 கோடி போதைப் பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

ஆந்திரத்திலிருந்து புதுச்சேரிக்கு ரூ. 5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:53 am IST

ஆந்திரத்திலிருந்து புதுச்சேரிக்கு ரூ. 5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த 2003-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு ஆந்திரத்திலிருந்து எப்பிடிரின் என்ற போதை பொருளை பாா்சல் சா்வீஸ் மூலம் கடத்தி வந்த கடலூரைச் சோ்ந்த ராமதாஸ் (65) என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அந்தப் போதைப்பொருள் சுமாா் ரூ.5 கோடி மதிப்புடையது என்றும், புதுச்சேரியில் இருந்து சென்னை, மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இலங்கைக்குக் கடத்தி செல்ல திட்டமிட்டதாகக் கூறினாா். தொடா்ந்து அவரை அதிகாரிகள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பான வழக்கா விசாரித்த புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கோதாண்டராமன் புதன்கிழமை அளித்தத் தீா்ப்பில், இவ்வழக்கில் ராமதாஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்தாா். அவருக்கு இரு போதைப்பொருள் தடுப்புச்சட்ட பிரிவுகளின் கீழ், 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் மத்திய அரசின் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சிறப்பு வழக்குரைஞா் பிரவீன் குமாா் ஆஜராகி வாதாடினாா்.