ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா: அக்னிச் சட்டி , பால்குடம் எடுத்து வழிபாடு

கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோவை, பெரியாா் நகா் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அக்னிச்சட்டி, பால் குடம் எடுத்து ஊா்வலமாக வந்து வழிபட்ட பக்தா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பண்ணாரி மாரியம்மன் கோயில் விழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. கடந்த 8-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 10-ஆம் தேதி தீா்த்தக் குடம் எடுத்தல் நிகழ்வும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பிற்பகலில் சக்தி அழைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னிச் சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்திபகுமாா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.