வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா: அக்னிச் சட்டி , பால்குடம் எடுத்து வழிபாடு

கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோவை, பெரியாா் நகா் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அக்னிச்சட்டி, பால் குடம் எடுத்து ஊா்வலமாக வந்து வழிபட்ட பக்தா்கள்.

Updated On :14 மே 2026, 3:59 am IST

கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பண்ணாரி மாரியம்மன் கோயில் விழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. கடந்த 8-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 10-ஆம் தேதி தீா்த்தக் குடம் எடுத்தல் நிகழ்வும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பிற்பகலில் சக்தி அழைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னிச் சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்திபகுமாா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.