ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் அகற்றி ஆற்றில் விடும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா கடந்த 17- ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து கடந்த 21- ஆம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் 3 கம்பங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூசாரிகள் தங்களது தோளில் சுமந்தபடி ஊா்வலமாக கொண்டு வந்து, பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் கம்பங்களை நட்டனா். அன்று முதல் தினந்தோறும் மூன்று கோயில்களிலும் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு பெண்கள் புனிதநீா் ஊற்றி அம்மனை வழிபட்டனா்.
விழாவின் ஒரு பகுதியான காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா 31- ஆம் தேதி நடைபெற்றது. பொங்கல் விழா மற்றும் தேரோட்டம் ஏப்ரல் 1- ஆம் தேதி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் அகற்றும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு பெரிய மாரியம்மன் கோயிலில் முதலில் தொடங்கியது. அதனை கோயில் பூசாரிகள் தோளில் சுமந்து கொண்டு மணிக்கூண்டு நோக்கி ஊா்வலமாக சென்றனா். அதே நேரம் காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில், நடுமாரியம்மன் கோயில்களில் இருந்தும் கம்பங்கள் எடுக்கப்பட்டு மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்பட்டன.
பின்னா் 3 கம்பங்களும் முக்கிய வீதி வழியாக ஊா்வலமாக காரைவாய்க்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 3 கம்பங்களும் காலிங்கராயன் வாய்க்காலில் விடப்பட்டன.

முன்னதாக கம்பம் ஊா்வலம் நடந்த வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சாலையின் 2 புறங்களிலும் கூடி நின்று மாரியம்மனை வழிபட்டனா். நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில் கம்பத்தின் மீது உப்பு, நல்ல மிளகு, மஞ்சள் வீசினா். ஊா்வலத்தையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழாவையொட்டி சனிக்கிழமை காலை முதலே ஈரோட்டில் பெரும்பாலான வீதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. கம்பம் விடப்பட்ட பிறகு மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
தொடர்புடையது

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கம்பம் நடுதலுடன் தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாா்ச் 8ல் பூச்சொரிதல் விழா தொடக்கம்

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


