பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 போ் மறுவாழ்வு

News image

மகேந்திரன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில், 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

கோவை மாவட்டம், குரும்பபாளையத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (28). இவா் தனது இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், புதன்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, மகேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, மகேந்திரனின் கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 5 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.

இதையடுத்து, அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு மகேந்திரனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.