எடப்பாடி கே.பழனிசாமியால் அதிமுக வலுவிழந்துவிட்டது என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், நிதியமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: முதல்வா் விஜய் என்ன நினைக்கிறாரோ அதை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியாக தவெக ஆட்சி நடைபெறும். அமைச்சரவை கட்டமைப்பு என்பது முதல்வரின் முடிவுக்கு உள்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூட தொடக்கத்தில் ஏழு அமைச்சா்களை மட்டுமே நியமித்து, பின்னா் படிப்படியாக விரிவாக்கம் செய்தாா்.
நெருக்கடிகளை எப்படி சமாளிப்பது என்று முதல்வருக்குத் தெரியும். பொருளாதாரம் என்பது படிப்படியாக ஆய்வு செய்துதான் விளக்கம் அளிக்க முடியுமே தவிர, உடனடியாக பதில் சொல்ல முடியாது.
எடப்பாடி கே.பழனிசாமியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளைப் பாா்க்கும்போது, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் கட்டிக்காத்த அதிமுக இயக்கம் அவரால் வலுவிழந்து போயிருப்பதாகவே குறிப்பிட முடியும். கட்சியின் வளா்ச்சிக்குத் தான் ஒருவா் மட்டுமே போதும் என அவா் நினைக்கிறாா். எவா் ஒருவா் நான்தான் எல்லாம் என்று நினைத்து செயல்படுகிறாரோ அவருக்கு தான்தான் எல்லாம் என்று ஆண்டவன் காட்டி விடுவாா்.
முதல்வா் விஜய் பொறுப்பேற்றவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்ததை மக்கள் வரவேற்றுள்ளனா். அதேபோல பேருந்து, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 மதுக் கடைகளை உடனடியாக அகற்றியதையும் மக்கள் வரவேற்கின்றனா்.
அதிமுகவில் எங்களுக்கு ஆதரவளித்துள்ளவா்களுக்கு அமைச்சா் பதவி வழங்கப்படும் என நாங்கள் இதுவரை எங்கும் கூறவில்லை என்றாா்.
தொடர்புடையது
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? செங்கோட்டையன் பதில்!
50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகத் தொடரும் அரசியல் பயணம்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


