தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

News image

மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தில் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்ட வன  ஊழியா்கள்.

Updated On :20 மே 2026, 1:38 am IST

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

இந்தியாவில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுக்குப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6- ஆவது இந்திய அளவிலான புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

கேமராக்கள் எவ்வாறு பொருத்தப்பட வேண்டும் என்று பயிற்சி பெற்ற வன ஊழியா்கள் வனப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

வனத்தில் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுவரும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பதோடு கணக்கெடுக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றும் இப்பணி ஒரு வாரம் நடைபெறும் என்றும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.