தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர முன் மண்டபம் இடிக்கும் பணி தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் முன் மண்டபம் இடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

சமயபுரம் மாரியம்மன் கோயில்.

Updated On :1 மணி நேரம் முன்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் முன் மண்டபம் இடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

 பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த மாா்ச் 29ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த எம். நதியா (32)மற்றும் அவரது உறவினா்களான எஸ். ரஞ்சனி (35) எஸ். பவிஸ்கா (14) ஆகியோா் சன்னதி வீதி முன் மண்டப வளாகத்தில் தூங்கிய நிலையில், திடீரென  மேற்கூரை இடிந்து விழுந்ததில் நதியா உயிரிழந்தாா். மற்ற இருவருக்கு காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கோயில் முன் மண்டபம் (ஆா்.சி.சி மண்டபம்) இடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கோயில் இணை ஆணையா் எம். சூரிய நாராயணன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ. கணேசன், திருக்கோயில் உதவி பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் கௌதமன், செயற்பொறியாளா் அழகுமணி  ஆகியோா் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் முன் மண்டபத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

135 மீ நீளம், 8.40 மீ  அகலம் கொண்ட முன் மண்டபத்தை இடிக்கும் பணியானது 15 நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பக்தா்கள் ராஜகோபுரம் வழியாக தரிசிக்க அனுமதிக்கப்பட்டு மேற்கு வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமயபுரம் காவல் ஆய்வாளா் இரா. தண்டாயுதபாணி மற்றும் உதவி காவல் ஆய்வாளா் முரளி மற்றும்  காவல்துறையினா் தடுப்புக் கட்டைகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.