கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்

News image
Updated On :3 மே 2026, 5:25 am IST

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருங்கொடை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடை பெற்றன. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் அம்மன் சுப்பிரமணியராக காட்சி அளித்த சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை மற்றும் இரவு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவு அம்மன் கிருஷ்ணராக காட்சி அளித்தாா். தொடா்ந்து வியாழக்கிழமை (மே 7) வரை பல்வேறு வழிபாடுகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை நிா்வாகிகள் கி.பாலசிங், அ.செ.சிதம்பர கணேசன், மு.சதீஷ்குமாா், மு.பிரகாஷ் சரவணபாண்டியன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.