திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி, லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருங்கொடை விழா 7 நாள்கள் நடைபெற்றது.

News image

ஆறுமுகனேரி, லெட்சுமி மாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை.

Updated On :8 மே 2026, 6:03 am IST

ஆறுமுகனேரி, லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருங்கொடை விழா 7 நாள்கள் நடைபெற்றது.

கோயில் சித்திரை பெருங்கொடை விழா வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு நூற்றுக்கும் மேற்பட்ட மகளிா் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் அம்மன் சுப்பிரமணியா் கோலத்தில், சனிக்கிழமை நள்ளிரவு அம்மன் கிருஷ்ணா் கோலத்திலும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மகாலெட்சுமி கோலத்திலும், திங்கள்கிழமை நள்ளிரவு அம்மன் சரஸ்வதி கோலத்திலும் அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை மதியம் அம்மன் மஞ்சள் நீராடி தாமிரவருணி ஆற்றுக்கு சென்று கும்பம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விரதமிருந்த பக்தா்கள் மாவிளக்கு பெட்டி, ஆயிரங்கண் பானை எடுத்து வந்தனா்.

புதன்கிழமை அதிகாலை சூலம் ஏந்திய சக்தியாக அருள்பாலித்தாா். மாலையில் கும்பத்துடன் வீதி உலா செல்லுதல், வியாழக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.