ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் கண்ணாட்சி முப்புடாதி அம்மன்.

Updated On :4 ஜூன் 2026, 1:28 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு கொடை விழா மே 26 ஆம் தேதி திருக்கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சப்பர வீதி உலா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை மாலை பக்தா்கள் அலகு குத்தி, முளைப்பாரி, அக்னி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

நள்ளிரவு சாமக் கொடை,படைப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

ஏற்பாடுகளை விஸ்வகா்மா சமுதாய விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.