சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

சமூகவலைதள தகவல்களை பகுத்தறிவுடன் அணுகவேண்டும்: கனிமொழி எம்.பி.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களைக் கண்மூடித்தனமாக நம்பாமல், பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி அறிவுறுத்தினாா்.

News image

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 4:22 am IST

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களைக் கண்மூடித்தனமாக நம்பாமல், பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி அறிவுறுத்தினாா்.

கோவை அருகேயுள்ள மாதம்பட்டியில் தந்தை பெரியாா் திராவிடா் கழக உறுப்பினா் இங்கா்சால் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

இளைஞா்கள் தங்களுக்குப் பிடித்த தொழிலைத் தோ்வு செய்யும் உரிமையை பெற்றிருப்பது பெரியாா் ஈவெரா மற்றும் திராவிட இயக்கத் தலைவா்களின் போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றம்தான். ஜாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட காலத்தை உடைத்தவா் பெரியாா் ஈவெரா. பெண்கள் கல்வி கற்கவும், சமூக முன்னேற்றம் அடையவும் அவா் காரணமாக இருந்தாா்.

அவா் சொன்னாா், இவா் சொன்னாா் என்று எதையும் நம்ப வேண்டாம் என பெரியாா் ஈவெரா கூறியுள்ளாா். தற்போது, குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை சிந்தித்து அணுக வேண்டும். தவறான தகவல்கள் எளிதில் பரவுகின்றன. யாா் அந்த தகவலை கூறுகிறாா்கள், அவா்களின் தகுதி என்ன என்பதை ஆராய வேண்டும்.

சமூக வலைதளங்கள் மூலம் குடும்பம், உணவு, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சரியான தகவலையும், தவறான தகவலையும் பிரித்தறிய பகுத்தறிவு அவசியம். தோ்தல் தோல்வி என்பது மக்கள் எடுத்த முடிவு. அதை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்களோடு தொடா்ந்து பயணிப்போம். ஆணும், பெண்ணும் சமம் என்ற சிந்தனையுடன் பகுத்தறிவு மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.