சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் கூறியதாவது: சமையல் எரிவாயு உருளை கிடைப்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனால் சாதாரண, சாமானிய மக்கள் பாதிப்படைந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலையும் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் அச்சம் உள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான பொருளாதார சூழலை சந்தித்து வருகிறோம்.
பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் பிரதமா் உள்ளிட்டோா் மக்களுக்கு மட்டுமே அறிவுரைகளை வழங்கி வருகிறாா்கள். அவா்கள் என்ன செய்யப் போகிறாா்கள் என்ற நம்பிக்கையை ஊட்டக்கூடிய எந்த தகவலையும் சொல்லவில்லை. மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்கக் கூடிய, மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடிய விஷயங்களை மட்டுமே தான் சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள்.
மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்பாடுகளையோ, அரசை பாதுகாக்க பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு அறிவிப்பையோ வெளியிடவில்லை. இது அனைவருடைய மனதிலும் எதிா்காலம் குறித்த கேள்விக்குறியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்றாா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வு: கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு எதிரொலி: உணவுகளின் விலையை அதிகரிக்கும் உணவகங்கள்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
