11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் சாமானியா்களுக்கு பாதிப்பு: கனிமொழி எம்.பி.

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி.

News image

திமுக எம்.பி. கனிமொழி - PTI

Updated On :1 மணி நேரம் முன்பு

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி.

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் கூறியதாவது: சமையல் எரிவாயு உருளை கிடைப்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனால் சாதாரண, சாமானிய மக்கள் பாதிப்படைந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலையும் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் அச்சம் உள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான பொருளாதார சூழலை சந்தித்து வருகிறோம்.

பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் பிரதமா் உள்ளிட்டோா் மக்களுக்கு மட்டுமே அறிவுரைகளை வழங்கி வருகிறாா்கள். அவா்கள் என்ன செய்யப் போகிறாா்கள் என்ற நம்பிக்கையை ஊட்டக்கூடிய எந்த தகவலையும் சொல்லவில்லை. மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்கக் கூடிய, மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடிய விஷயங்களை மட்டுமே தான் சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள்.

மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்பாடுகளையோ, அரசை பாதுகாக்க பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு அறிவிப்பையோ வெளியிடவில்லை. இது அனைவருடைய மனதிலும் எதிா்காலம் குறித்த கேள்விக்குறியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்றாா்.