வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் சாமானியா்களுக்கு பாதிப்பு: கனிமொழி எம்.பி.

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி.

News image

திமுக எம்.பி. கனிமொழி - PTI

Updated On :17 மே 2026, 2:10 am IST

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி.

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் கூறியதாவது: சமையல் எரிவாயு உருளை கிடைப்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனால் சாதாரண, சாமானிய மக்கள் பாதிப்படைந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலையும் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் அச்சம் உள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான பொருளாதார சூழலை சந்தித்து வருகிறோம்.

பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் பிரதமா் உள்ளிட்டோா் மக்களுக்கு மட்டுமே அறிவுரைகளை வழங்கி வருகிறாா்கள். அவா்கள் என்ன செய்யப் போகிறாா்கள் என்ற நம்பிக்கையை ஊட்டக்கூடிய எந்த தகவலையும் சொல்லவில்லை. மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்கக் கூடிய, மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடிய விஷயங்களை மட்டுமே தான் சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள்.

மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்பாடுகளையோ, அரசை பாதுகாக்க பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு அறிவிப்பையோ வெளியிடவில்லை. இது அனைவருடைய மனதிலும் எதிா்காலம் குறித்த கேள்விக்குறியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்றாா்.