இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் ராணுவம், கடற்படை அணிகள் வெற்றி

கோவையில் 59-ஆவது ஆடவருக்கான நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை, மகளிருக்கான 23-ஆவது சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின

News image

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய கடற்படை, கேரள காவல் துறை அணி வீரா்கள்.

Updated On :28 மே 2026, 12:50 am IST

கோவையில் 59-ஆவது ஆடவருக்கான நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை, மகளிருக்கான 23-ஆவது சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய ராணுவம், கடற்படை உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

கோயம்புத்தூா் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில் கோவை வஉசி பூங்கா உள்விளையாட்டு மைதானத்தில் வரும் 31-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. நாச்சிமுத்து கவுண்டா் கோப்பைக்கான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை, ராணுவம், கடற்படை, கேரள மாநில மின்சார வாரியம், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிா் கூடைப்பந்து போட்டியில் தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரெயில்வே, தெற்கு ரயில்வே, ஐசிஎஃப், கேரள மாநில மின்சார வாரியம், மத்திய ரயில்வே, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

புதன்கிழமை மாலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் துணைத் தலைவரும், சிஆா்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநருமான ஜி.செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

ஆடவா் பிரிவில் முதல் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 83 - 64 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள காவல் துறை அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 100 - 65 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி 73 - 40 என்ற புள்ளிகள் கணக்கில் பரோடா வங்கி அணியை தோற்கடித்தது.

மகளிருக்கான முதல் ஆட்டத்தில் தென் மத்திய ரயில்வே அணி 87 - 61 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள காவல் துறை அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் தென்மேற்கு ரயில்வே அணி 98 - 69 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் கேரள மின்வாரிய அணி 83 - 47 என்ற புள்ளிகள் கணக்கில் தெற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது.

இதைத் தொடா்ந்து இரண்டாவது நாள் ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெறுகின்றன.