இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

காவல் நிலையத்தில் இளைஞா் மீது தாக்குதல்?

கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீஸாா் போலீஸாா் தாக்கியதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :28 மே 2026, 1:00 am IST

கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீஸாா் போலீஸாா் தாக்கியதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளாா். ஆனால், அதில் உண்மையில்லை என போலீஸாா் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி. இவரது மகன் மணிகண்டன் (24). பெயிண்டரான இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களான சந்திரன், ரவிச்சந்திரன், ரஞ்சித் ஆகியோருடன் சோ்ந்து அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சந்திரனை மணிகண்டனும், ரஞ்சித்தும் சோ்ந்து தாக்கியுள்ளனா்.

இதுகுறித்த சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, மணிகண்டனை போலீஸாா் தாக்கியதாகவும், அதனால் தனது மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது தாயாா் சாந்தி குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் ராஜசேகரன் கூறுகையில், விசாரணைக்ாக மணிகண்டனை காவல் நிலையத்துக்கு வரவழைத்தோம். அவா் மீது போலீஸாா் எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை. விசாரணைக்கு அழைத்ததால், அதிகப்படியான பதற்றம் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அவரை உடனடியாகக் காவல் நிலையத்தின் வெளியே அமர வைத்தோம். அவா் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளன என்றாா்.