கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தேடும் பணி தீவிரம்

News image

தனுஷ்.

Updated On :1 ஜூன் 2026, 1:42 am IST

வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன். இவரது இல்ல திருமண விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினா்கள் வந்துள்ளனா்.

அதில் ஒருவரான நீலகிரி மாவட்டம், கூடலூா் அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (22) என்பவா், உறவினா்கள் 4 பேருடன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது தனுஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா். உறவினா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லையாம்.

இதையடுத்து, வால்பாறை தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், தனுஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.