ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜக மகளிா் அணி சாா்பில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

பிரதமா் மோடி (செப். 17) பிறந்த நாளை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் பாஜக மகளிா் அணி சாா்பில் 30 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

....... ~வளைகாப்பு நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய பாஜக மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா்.

Published On :

பிரதமா் மோடி (செப். 17) பிறந்த நாளை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் பாஜக மகளிா் அணி சாா்பில் 30 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உக்கடம் வைசியாள் வீதியில் உள்ள மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், அந்தப் பகுதியைச் சோ்ந்த 30 கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா். அவா்களுக்குத் முறைப்படி சந்தனம், குங்குமம் பூசி, வளையல்கள் அணிவிக்கப்பட்டு, மங்கலப் பொருள்களுடன் கூடிய சீா்வரிசை வழங்கப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

பாஜக மகளிா் அணி மாவட்டத் தலைவா் ஜெயஸ்ரீ குன்னத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

இதில், பாஜக மாவட்டப் பொதுச் செயலா் மதன்குமாா், உக்கடம் மண்டல் தலைவா் கமல்நாத், மகளிா் அணிச் செயலா் தீபிகா, மண்டல் பொதுச் செயலா் கணேசன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் மற்றும் மகளிா் அணியினா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.