ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: டிசம்பர் 27இல் எதிர்க் கட்சியினர் உண்ணாவிரதம்

விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு அருகே விவசாயிகள்

Updated On :25 டிசம்பர் 2018, 5:48 am IST

விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு அருகே விவசாயிகள் நடத்தி வரும் தொடர் காத்திருப்பு, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக, எதிர்க் கட்சியினர் சார்பில்  டிசம்பர் 27 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு அருகே மூலக்கரை பிரிவில், உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள், உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், டிசம்பர் 17 ஆம் தேதி முதல் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் 6 பெண்கள் உள்ளிட்ட 11 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 8 ஆவது நாளாக விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் தொடர்கிறது.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக்  கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து விவசாய நிலத்தை அழிக்கக் கூடாது. அதற்கு மாற்றாக சாலையோரங்களில் புதைவட கேபிள் மூலமாக கொண்டு செல்ல வேண்டும். உயர் மின் கோபுரங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அனைத்துக் கட்சிகள் சார்பில் டிசம்பர் 27 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், திமுக, காங்கிரஸ், அமமுக, கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.