சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

சாலை விபத்தில் இளைஞர் சாவு

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 7:47 am IST

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த, கருமாஞ்சிறை, கைத்தான்வலசைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு வந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குத் திரும்பிச் சென்றார். 
அவர், பெருந்துறையை அடுத்த வாவிக்கடை அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.