தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பெருந்துறை  வட்டாரத்தில்  மாடிக் காய்கறித் தோட்டம்

பெருந்துறை வட்டாரத்தில் தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் மூலமாக மாடிக் காய்கறித் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:45 am

DIN

பெருந்துறை வட்டாரத்தில் தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் மூலமாக மாடிக் காய்கறித் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, பெருந்துறை மஞ்சள் வணிக வளாகத்தில் செயல்படும் தோட்டக் கலைத் துறையினர் கூறியதாவது:
வீட்டின் மாடியிலோ அல்லது வீட்டின் முன்புறமோ நன்றாக வெயில்படும் இடங்களில் இத்தோட்டத்தை அமைக்கலாம். காய்கறித் தோட்டம் அமைக்கத் தேவையான விதைகள், உரங்கள் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானிய விலையில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.  
தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், அவரை, கொத்தவரை, கீரை, முள்ளங்கி, பாகல், கொத்தமல்லி விதைகள், ஒரு கிலோ நீரில் கரையும் உரம், 400 கிராம் உயிர் உரம், 6 செடி வளர்க்கும் பைகள், மக்கிய தேங்காய் நார் 12 கிலோ, இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து, செய்முறை புத்தகம் ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.