ஈரோட்டில் சாயக் கழிவு நீரை வெளியேற்றிய மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் புதன்கிழமை துண்டிக்கப்பட்டன.
ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாய, சலவை, தோல் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சாயம் சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்ய சதவீதம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை மீண்டும் பயன்படுத்தி வருகின்றன.ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஓடைகள் வழியாக காவிரி ஆறு, காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேற்றுவதைத் தடுக்கும் வகையில், ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் வீரப்பன் சத்திரம், பி.பெ. அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி மலையாண்டி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவு நீரை வெளியேற்றிய 2 சாயப் பட்டறை, ஒரு சலவைப் பட்டறை செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 3 ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக பிரசாரம்; திருச்சி வந்தடைந்த விஜய்! | TVK

இந்த வாரம் கலாரசிகன் - 19-04-2026
சட்டப்பேரவையில் விசில் அடிக்க முடியாது: திருமாவளவன்

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

