ஈரோட்டில் சாயக் கழிவு நீரை வெளியேற்றிய மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் புதன்கிழமை துண்டிக்கப்பட்டன.
ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாய, சலவை, தோல் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சாயம் சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்ய சதவீதம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை மீண்டும் பயன்படுத்தி வருகின்றன.ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஓடைகள் வழியாக காவிரி ஆறு, காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேற்றுவதைத் தடுக்கும் வகையில், ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் வீரப்பன் சத்திரம், பி.பெ. அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி மலையாண்டி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவு நீரை வெளியேற்றிய 2 சாயப் பட்டறை, ஒரு சலவைப் பட்டறை செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 3 ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

உழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

