கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

அஞ்சல் நிலையத்தை  முற்றுகையிட்ட தேமுதிகவினர் 102 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட  25 பெண்கள் உள்ளிட்ட 102 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 ஈரோடு, காந்திஜி சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் கோபால் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, அவைத் தலைவர் முருகன், துணைச் செயலாளர் ஆனந்த், தங்வேல், லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டபடி மாவட்ட தலைமை அஞ்சல்  நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஈரோடு நகர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயன், போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  
 இதையடுத்து, தேமுதிகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட  25 பெண்கள் உள்பட மொத்தம் 102 பேரை போலீஸார் கைது செய்து, ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.