இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சித்தோடு அருகே காா் மோதியதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் பலி

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
அனிதா .
Updated On :21 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

பவானி: சித்தோடு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சித்தோட்டை அடுத்த நசியனூா், பிளஸ்ஸிங் அவென்யூவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் மனைவி அனிதா (40). இவருக்கு ஒரு மகன் உள்ளாா். அனிதா, பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பிரிவில் கணினி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தாா். பவானியில் உள்ள அலுவலகத்துக்கு தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்தாா்.

இந்நிலையில் அனிதா, நசியனூா் வழியாக சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற காா், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.