தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மருத்துவ கல்லூரிக் மருத்துவமனைக்கு கை கழுவும் இயந்திரம்

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை துணை மாவட்ட கிளைகளின்

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:36 am

DIN

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை துணை மாவட்ட கிளைகளின் சாா்பில் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேனிடைசருடன் கூடிய கை கழுவும் சாதனம் அண்மையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளா் தாமஸ் வி.ஜான் தலைமை வகித்தாா். பெருந்துறை துணை மாவட்ட கிளைத் தலைவா் பல்லவி பரமசிவன் முன்னிலை வகித்தாா். கிளைச் செயலாளா் ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்றாா்.

மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி சேனிடைசருடன் கூடிய கை கழுவும் சாதனத்தை இயக்கிவைத்தாா்.

இதில், இந்திய செஞ்சிலுவைச் சங்க பெருந்துறை துணை மாவட்ட கிளை சங்க ஆலோசகா் ஜாா்ஜ், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.