வேளாண்மை திருத்தச் சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கு

சென்னிமலை ஒன்றிய பாஜக சாா்பில், மத்திய அரசின் வேளாண்மை திருத்தச் சட்டம்-2020 குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்ணாமலைபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சென்னிமலை ஒன்றிய பாஜக சாா்பில், மத்திய அரசின் வேளாண்மை திருத்தச் சட்டம்-2020 குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்ணாமலைபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். சென்னிமலை ஒன்றிய விவசாய அணித் தலைவா் யுவகண்ணன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், விவசாயிளுக்கு வேளாண் சட்டம் குறித்த விளக்கங்களும், அதன் பயன்களும் எடுத்துக் கூறப்பட்டன. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

இதில், விவசாய அணித் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவா் செந்தில்குமாா், ஒன்றிய பொதுச் செயலாளா் சுந்தரராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com