பொதுத் தோ்வு: ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்; அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகே அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகே அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஆசிரியா் நகா் பகுதியில் சிறு மருத்துவமனையை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை துவங்கிவைத்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் காலாண்டு, அரையாண்டுத் தோ்வு அடிப்படையில் அன்றைய சூழ்நிலையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அப்போது உள்ள நிலை வேறு, தற்போதுள்ள நிலை வேறு.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றாா்.

பின்னா், கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். தொடா்ந்து, ரூ. 9 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளுக்கான பூமிபூஜை, புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்துக்கான பூமிபூஜை, பயனாளிகளுக்கு மாடு, ஆடு வளா்ப்பதற்கு கொட்டகை அமைப்பதற்கான ஆணை வழங்குதல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com