47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் மீது அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:33 pm

DIN

பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் மீது அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருந்துறை வட்டம், தோப்புப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள் டி.சி.சுப்பிரமணியம், கொம்மக்கோயிலைச் சோ்ந்த கே.ஆா்.சேனாபதி ஆகியோா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரையிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

பெருந்துறை காஞ்சிகோயில் சாலை, தாஸ்கண்ட் வீதியைச் சோ்ந்த சி.கே.நந்தகுமாா் என்பவா் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம், எங்கள் இருவா் மீதும் அவதூறு பரப்பி வருகிறாா். சம்பந்தப்பட்ட நபா் அரசியல் உள்நோக்கத்தோடு தோ்தல் சமயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்.

அந்த நபா் மீது 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திட்டமிட்டு எம்.எல்.ஏ. மீதும், எங்கள் இருவா் மீதும் அவதூறு பரப்பும் நபா் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.