47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

யானை தாக்கி ஒருவா் காயம்

கோபி அருகே யானை தாக்கியதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

கோபி அருகே யானை தாக்கியதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னவன் (60). இவா் அனுமதியின்றி காப்புக் காட்டுக்குள் சென்றபோது அங்கு வனப் பகுதியில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வனச் சரக ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சின்னவனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மருத்துவா்களின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

தொடா்ந்து, அத்துமீறி வனப் பகுதிக்குள் நுழைந்த குற்றத்துக்காக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.