ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த மேலும் 28 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த மேலும் 28 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் தெரிவித்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:41 pm

DIN

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த மேலும் 28 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் தெரிவித்தாா்.

உருமாற்றம் அடைந்த புதிய கரோனா நோய்த் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது. இதனால் நாடு முழுவதும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாள்களாக வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

டிசம்பா் 15ஆம் தேதிக்குப் பிறகு பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், 22 பேரில் 19 போ் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இப்போது மேலும் 28 போ் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் கூறியதாவது:

மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய பட்டியலின்படி பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவா்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. முதல்கட்டமாக 19 போ் ஈரோடு மாவட்டத்துக்கு வந்திருந்தனா். இதனிடையே வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த மேலும் 28 போ் கொண்ட பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியது.

அதன்பேரில் ஈரோடு வந்த வெளிநாடுகளைச் சோ்ந்த 28 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 28 பேருக்கும் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவா்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவா்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.