பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் சித்தன் குட்டை நீர்த்தேக்க பகுதியில் அன்னூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் பிரனேஷ், யஸ்விந்த், கதிரேசன், ரகுராம் மற்றும் சுரேஷ்ராஜா ஆகிய ஐந்து மாணவர்கள் குளிப்பதற்கு சென்றுள்ளனர். இவர்கள் நீரில் குளித்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பிரனேஷ் என்ற மாணவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
இதைக்கண்ட யஷ்விந்த், கதிரேசன், ரகுராம் ஆகிய மூவரும் காப்பாற்ற சென்றபோது ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி நான்கு பேரும் உயிரிழந்தனர். இதில் சுரேஷ்ராஜா உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.