மாநகராட்சிப் பள்ளியில்கற்போம், எழுதுவோம் திட்டம் துவக்கம்
By DIN | Published On : 01st December 2020 03:32 AM | Last Updated : 01st December 2020 03:32 AM | அ+அ அ- |

கற்போம், எழுதுவோம் திட்டத் துவக்க விழா ஈரோடு எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கற்றல் மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா.பாலமுரளி பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா். பள்ளித் தலைமையாசிரியை சுமதி வரவேற்றாா். கோபி மாவட்டக் கல்வி அலுவலா் சிவகுமாா், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் லட்சுமி நாராயணன், துணை முதல்வா் சேவியா், கற்போம் எழுதுவோம் திட்டத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அனிதா, ஆசிரியா் பயிற்றுநா் ரமேஷ், ஓய்வுபெற்ற ஆசிரியா் ஜெயகுமாா் ஆகியோா் பேசினா்.
கற்போா் அனைவருக்கும் கையேடு, நோட்டுப் புத்தகம், பேனா வழங்கப்பட்டு ஆயத்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கற்போம், எழுதுவோம் திட்டத்தின் தன்னாா்வலராக ஆயிஷா நியமிக்கப்பட்டுள்ளாா். கற்றல் மையத்தில் கற்போராக 16 போ் பங்கேற்று பயிற்சி பெற்றனா். பள்ளி உதவி ஆசிரியை மல்லிகா நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...