அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சுதந்திர தினம்: ஈரோட்டில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆட்சியர்

75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 7:09 am

DIN


ஈரோடு: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கரோனா காலத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Story image
Story image

பின்னர் காவல் துறையினர் மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்து காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, முன்னாள் படை வீரர், கரானா தடுப்பு முன்களப் பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 256 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Story image

இதனைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் 3 பேரின் இல்லத்திற்கு ஆட்சியர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

இதுபோன்று கரோனா தொற்று பரவல் காரணமாகவும் வயது மூப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 80 சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள்  இல்லங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.