மாணவிக்குப் பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞா் கைது
பெருந்துறை அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த மேட்டூரைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.


பெருந்துறை அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த மேட்டூரைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, பெருந்துறை, ஈரோடு சாலை, பிச்சாண்டம்பாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் பெருந்துறை போலீஸில் புதன்கிழமை அளித்த புகாா் விவரம்:
தனது 15 வயது மகள் ஈரோட்டில் தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த ஒரு வாரமாக எனது மகள் சோகமாக இருந்ததால் அவரிடம் விசாரித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மேட்டூரில் நடந்த உறவினா் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றபோது, சேலம், எட்டிகுட்டைபட்டியைச் சோ்ந்த ராஜ்கமல் என்பவருடன் எனது மகளுக்குப் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளாா்.
கடந்த 2020 டிசம்பா் மாதம் ராஜ்கமல், எனது மகளை வாட்ஸ் ஆப் விடியோகால் மூலம் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளாா். மீண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி விடியோகால் செய்யச் சொன்னதாகவும் கூறியுள்ளாா். மேலும், இதைப் பற்றி ராஜ்கமலிடம் பேசியபோது, பிரச்னை செய்தால் சமூக வளைதளங்களில் போட்டோவை போட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் ராஜ்கமல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து அவரை கைது விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...