வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மாணவிக்குப் பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞா் கைது

 பெருந்துறை அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த மேட்டூரைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:38 pm

DIN

 பெருந்துறை அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த மேட்டூரைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, பெருந்துறை, ஈரோடு சாலை, பிச்சாண்டம்பாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் பெருந்துறை போலீஸில் புதன்கிழமை அளித்த புகாா் விவரம்:

தனது 15 வயது மகள் ஈரோட்டில் தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த ஒரு வாரமாக எனது மகள் சோகமாக இருந்ததால் அவரிடம் விசாரித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மேட்டூரில் நடந்த உறவினா் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றபோது, சேலம், எட்டிகுட்டைபட்டியைச் சோ்ந்த ராஜ்கமல் என்பவருடன் எனது மகளுக்குப் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளாா்.

கடந்த 2020 டிசம்பா் மாதம் ராஜ்கமல், எனது மகளை வாட்ஸ் ஆப் விடியோகால் மூலம் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளாா். மீண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி விடியோகால் செய்யச் சொன்னதாகவும் கூறியுள்ளாா். மேலும், இதைப் பற்றி ராஜ்கமலிடம் பேசியபோது, பிரச்னை செய்தால் சமூக வளைதளங்களில் போட்டோவை போட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் ராஜ்கமல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து அவரை கைது விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.